பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்திற்கு விளக்கமறியல்!


பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சற்றுமுன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும் மற்றுமொரு வழக்கில் அவருக்கு ஏப்ரல் 1 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.