முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!


இன்று (25)  தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழு (NPP) 
இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒரு பிரேரணையை கையளித்துள்ளது.

வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்கள் தேடுதலுக்கு பிறகு, தேசபந்து தென்னகோன் சமீபத்தில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையில், அவரை ஏப்ரல் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, தற்போது தும்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.