ஜனாதிபதியின் ஓய்வூதியம் தொடர்பில் விசேட தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம், ஏப்ரல் முதல் நிறுத்தப்படும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நிதி பணிப்பாளருக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், பாராளுமன்ற ஓய்வூதியம் மற்றும் ஜனாதிபதி பதவிக்கான ஓய்வூதியம் ஆகிய இரண்டிற்கும் தகுதியுடையவராவார்.
இதனைத்தொடர்ந்து, "எனக்கு இரட்டை ஓய்வூதியம் தேவையில்லை" என கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்திருந்தார்.
மேலும், இதுகுறித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
அக்கடிதம், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நிதி பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி