வாகன விபத்தில் உயிரிழந்த 9 மாத குழந்தை!
அம்பாறை அக்கரைப்பற்று - பொத்துவில் A-04 பிரதான வீதியில் தாண்டியடி பகுதியில், நேற்று (23) அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற கார் ஒன்று, வீதியில் சென்ற மாடு மீது மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் சாரதி, அவரது மனைவி மற்றும் குழந்தையும் இருந்துள்ளனர்.
விபத்தில் , காயமடைந்த குழந்தை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தது.
அட்டாளைச்சேனை 05 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 9 மாதக் குழந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி