உள்ளூராட்சித் தேர்தல் குறித்து அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்
உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 02ஆம் திகதி வரை 456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 43 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளன.
அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 422 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 34 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
Tags:
இலங்கை செய்தி