ஜனாதிபதி நிதியில் மோசடி: விசாரணைகள் ஆரம்பம்..!
2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டமை தொடர்பாக 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோப்புகளின் பதிவுகளின்படி, குறித்த 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரூ. 100 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தப் பணம் பெறும் போது ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, ஜனாதிபதி நிதியக் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விபரங்களைப் பெறுவதற்காக, விசாரணை அதிகாரிகள் நேற்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவு பெற்றுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி