நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை!


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மேலும், மேற்கு, சப்ரகமுவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவா, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளைகளில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை காலங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடியதனால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.