இன்றிலிருந்து இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்!


சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கிறது. இதன்படி, இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ, மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கிறது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.  

தென் மாகாணத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். நாட்டின் பிற பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடி மழை ஏற்படலாம். மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை நேரத்தில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.  

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படலாம்.  

கடுமையான காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சூழ்நிலைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நீர்கொழும்பு தொடங்கி காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வழியாக மட்டக்களப்பு வரையான கடல் பகுதிகளில் மழை அல்லது இடி மழை பெய்யக்கூடும்.