கொட்டித்தீர்த்த மழையினால் திடீர் வெள்ளப்பெருக்கு ; பாடசாலைகளுக்கு பூட்டு!
கொட்டித்தீர்த்த மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக , சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை மற்றும் சிலாபம் விஜய வித்தியாலயமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் நகரில் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் , வடிகால் அமைப்பு அடைபட்டதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி