உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு!


இன்று (04) உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்ததன் பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்களால் வழங்கப்பட்டுள்ளது.