உள்ளூராட்சித் தேர்தலின் திகதி மாற்றம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு


உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடியே நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மே 6 ஆம் திகதியிலேயே தேர்தல் நடைபெறும் எனவும், அந்தத் திகதியில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 4) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், உத்தியோகபூர்வ வாக்களர் அட்டைகள் ஏப்ரல் 16ஆம் திகதி தபால் நிலையங்களுக்கு வழங்கப்படும் எனவும், ஏப்ரல் 20ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக நாளாகக் கருதப்படும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை மையமாகக் கொண்டு, அடுத்த வாரம் விசேட விவாதம் நடைபெறும். இவ்விவாதத்திற்கு அனைத்து அரசு நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.