இன்று முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்
இன்று (24) முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளைய தினமும் (25) எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 648,495 விண்ணப்பதாரர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
எவ்வாறாயினும் தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் மேலும் நீடிக்கப்படாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி